அத்தியாயம் 7
சாமந்தியின் தற்கொலைக்குக் காரணம் யார் என்று இன்னுமே கண்டுபிடிக்கப் படாத போதும், அவள் உடல் இறுதிக் கிரியைகளுக்காக அவள் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. சீல் வைத்த வீட்டையும் விடுவித்திருந்தனர்.
பூதவுடல் அவர்களின் வீட்டு விறாந்தையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அருகிலேயே தொய்ந்து போய் அமர்ந்திருந்தனர் பெற்றோர்.
அவளின் தற்கொலையே அவர்களை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தது. இதில், போதைப்பழக்கம் இருந்திருக்கிறது என்பது பெரும் இடி என்றால், கன்னித் தன்மையையும் இழந்திருக்கிறாள் என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
இது எல்லாவற்றையும் விட, கூடப் பிறந்தவனையும் பெற்றவரையும் காவல்துறை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது என்று அறிந்த போது, மனதளவில் மடிந்து போயிருந்தனர்.
சொந்தங்கள், உறவினர்கள், அயலட்டையினர், அவளோடு படித்தவர்கள், சாகித்தியனின் பல்கலைக்கழக நண்பர்கள் என்று, வருகிற எல்லோரையும் வீட்டுக்குள் அடக்க முடியாது என்பதால், வீட்டின் முன்னே டென்ட் அடித்து, வாடகைக்கு எடுத்த நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
நான்கைந்து வயதானவர்கள் பூதவுடலின் அருகிலேயே இருந்து, ஆட்கள் வருகிற போது ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர்.
கதிரவனும் நாயகமும் சாதாரண உடையில் அங்கிருந்தவர்களோடு கலந்து நின்றிருந்தனர். பார்வை ஒவ்வொருவரையும் துளைத்துக் கொண்டிருந்தது. ஆதினி தன் நண்பர்களோடு நின்று, இறப்பு வீட்டுக்கு வந்தவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
இறுதிக் கிரியைகள் நடந்து, கூடியிருந்தவர்களின் ஒப்பாரி ஓலத்துடன் சாமந்தியின் சடலம் மயானத்துக்குப் புறப்பட்டது. இத்தனைக்கு மத்தியிலும் கதிரவனின் விழிகள், ஒருவனைக் குறிவைத்துத் தொடந்துகொண்டே இருந்தன.
அவன் அஜய். சாகித்தியனின் நண்பன். எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தாலும் அவனிடத்தில் சற்று அதிகமாக இருந்தது. கலங்கும் விழிகளை மறைப்பதில் முனைந்தபடி சடலத்தைப் பின் தொடர்ந்தான்.
நாயகத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, மற்றவர்களின் கவனத்தைக் கவராமல், அவர்களுக்கு இடைஞ்சலும் கொடுக்காமல், அவனைப் பின் தொடர ஆரம்பித்தான் கதிரவன்.
அஜய், வீதியில் நிறுத்தியிருந்த தன் பைக்கில் ஏறவும், “ஷிட்!” என்று வாய்க்குள் முனகிவிட்டு எதிர் திசையில் நின்ற தன் பைக்கை எடுக்க ஓடினான். எதிரில் இன்னுமொரு பைக் வர, வேகமாக விலகி வழி விடப்போனவன் தட்டி, அவ்விடத்தில் நின்ற ஸ்கூட்டி தரையில் விழுந்தது.
அவனுக்குப் பின்னால் ஓடி வந்த நாயகம், “ஐயோ சேர், சிலுக்கு!” என்று பதறினார்.
“சிலுக்கா? வயசையும் பாக்காம ஏதாவது சொல்லப் போறன் நாயகம் அண்ணா. கெதியா வாங்க!” எவ்வளவு அவசரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரம் போய் என்ன பேச்சு இது என்கிற சினத்தில் சிடுசிடுத்துவிட்டு வேகமாக ஓடிப் போனான். அதே வேகத்துடன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து அவர் அருகில் நிறுத்த அவரும் ஏறிக்கொண்டார்.
அவன் வேகம் எடுக்க முனைந்த நொடியில் குறுக்காக வந்து நின்றாள் ஆதினி. “என்ன இது?” என்றாள் தன் ஸ்கூட்டியை காட்டி.
“ப்ச்! மறிக்காம முதல் தள்ளுங்க!” சிடுசிடுத்தபடி அவளைச் சுற்றிக்கொண்டு போக முனைந்தவனை அவள் விடவில்லை. மீண்டும் மறித்து நின்றாள்.
“நாயகம் அங்கிள் சொல்லியும் அவ்வளவு திமிராப் போறீங்க. மரியாதையா இறங்கி சிலுக்க நிமித்தி வச்சிட்டுப் போங்க!” என்றாள் உத்தரவாக.
அவர்களின் அவசரம் தெரியாமல் நடக்கும் அவள் மீது கதிரவனுக்கு எரிச்சல் பொங்கிற்று. அவன் எதையாவது சொல்வதற்குள் வேகமாக இறங்கி, அவளின் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்திவிட்டார் நாயகம்.
அதன் பிறகுதான் அவனை விட்டாள். அப்போதும், “முதல் முறை எண்டபடியா இத இதோட விடுறன். இனி என்ர சிலுக்குக்கு ஒரு அவமானம் நடந்தா, அது எனக்கு நடந்த மாதிரி. இத நினைவில வச்சு நடந்துகொள்ளுங்க!” என்று சொன்ன அவள், காற்றுடன்தான் கதைக்கவேண்டியிருந்தது.
அஜையைத் துரத்திக்கொண்டு பறந்திருந்தான் கதிரவன்.
பிரேதம் நாற்சந்தியைக் கடந்த பிறகு மயானத்துக்கு பைக்கில் செல்வதற்காகத் திரும்பி வந்துகொண்டிருந்த காண்டீபனின் பார்வையிலும் நடந்த அனைத்தும் பட்டது. அவளின் ‘சிலுக்கில்’ சின்ன சிரிப்பொன்று உதட்டோரம் அரும்பிற்று.
கூடவே நடந்து வந்துகொண்டிருந்த மாணவனிடம், “ஆர் அது?” என்று வினவினான்.
“ஆதினி சேர். எங்கட கம்பஸ்ல எங்கட பகல்ட்டி(faculty)தான். ஆனா, லோ(Law).” என்றான் அவன்.
“ஓ!” என்றவனின் விழிகள், இன்னுமே தன் சிலுக்குடன் என்னவோ கதை பேசிக்கொண்டு இருந்தவள் மீது சுவாரசியத்துடன் படிந்தது. அவள் வாய்க்குச் சட்டம் மகா பொருத்தம் என்றுதான் தோன்றிற்று.
“நீதிபதி இளந்திரையன் சேரின்ர மகள்.” அந்த மாணவன் வழங்கிய மேலதிகத் தகவலில் அவன் நடை நின்று போயிற்று.
“உண்மையாவா?”
“இல்லாம போலீசையே இந்தப்பாடு படுத்தேலுமா சேர்?”
பார்வை அவள் புறமிருக்கச் சிறு தலையசைப்புடன் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, அவளை நோக்கி நடந்தான்.
“ஏதும் ஹெல்ப் வேணுமா?”
ஸ்கூட்டியில் பட்டிருந்த தூசைத் தட்டிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தாள். இவனைக் கண்டதும், “காண்டீபன் சேர்!” என்று முகம் மலர்ந்துவிட்டு, “கீழ விழுந்திட்டுது. மற்றும் படி ஒரு பிரச்சினையும் இல்ல.” என்றபடி அதில் ஏறி அமர்ந்தாள்.
“என்னைத் தெரியுமா?” மெல்லிய ஆச்சரியத்துடன் வினவினான் காண்டீபன்.
“தெரியாம? ஆர்ட்ஸ் பகல்டி முழுக்க எங்கட காண்டீபன் சேர் அப்பிடி, எங்கட காண்டீபன் சேர் இப்பிடி எண்டு காதுல ரெத்தம் வர வைப்பினம். அப்பிடியான ஆளைத் தெரிஞ்சு வைக்காம இருப்பனா?”
சரளமாக வந்த அவள் பேச்சில் ஈர்க்கப்பட்டு, “அது சும்மா பாசத்தில சொல்லி இருப்பினம்.” என்று அவளிடம் பேச்சை வளர்த்தான் அவன்.
சாமந்தியின் தற்கொலைக்குக் காரணம் யார் என்று இன்னுமே கண்டுபிடிக்கப் படாத போதும், அவள் உடல் இறுதிக் கிரியைகளுக்காக அவள் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. சீல் வைத்த வீட்டையும் விடுவித்திருந்தனர்.
பூதவுடல் அவர்களின் வீட்டு விறாந்தையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அருகிலேயே தொய்ந்து போய் அமர்ந்திருந்தனர் பெற்றோர்.
அவளின் தற்கொலையே அவர்களை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தது. இதில், போதைப்பழக்கம் இருந்திருக்கிறது என்பது பெரும் இடி என்றால், கன்னித் தன்மையையும் இழந்திருக்கிறாள் என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
இது எல்லாவற்றையும் விட, கூடப் பிறந்தவனையும் பெற்றவரையும் காவல்துறை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது என்று அறிந்த போது, மனதளவில் மடிந்து போயிருந்தனர்.
சொந்தங்கள், உறவினர்கள், அயலட்டையினர், அவளோடு படித்தவர்கள், சாகித்தியனின் பல்கலைக்கழக நண்பர்கள் என்று, வருகிற எல்லோரையும் வீட்டுக்குள் அடக்க முடியாது என்பதால், வீட்டின் முன்னே டென்ட் அடித்து, வாடகைக்கு எடுத்த நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
நான்கைந்து வயதானவர்கள் பூதவுடலின் அருகிலேயே இருந்து, ஆட்கள் வருகிற போது ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர்.
கதிரவனும் நாயகமும் சாதாரண உடையில் அங்கிருந்தவர்களோடு கலந்து நின்றிருந்தனர். பார்வை ஒவ்வொருவரையும் துளைத்துக் கொண்டிருந்தது. ஆதினி தன் நண்பர்களோடு நின்று, இறப்பு வீட்டுக்கு வந்தவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
இறுதிக் கிரியைகள் நடந்து, கூடியிருந்தவர்களின் ஒப்பாரி ஓலத்துடன் சாமந்தியின் சடலம் மயானத்துக்குப் புறப்பட்டது. இத்தனைக்கு மத்தியிலும் கதிரவனின் விழிகள், ஒருவனைக் குறிவைத்துத் தொடந்துகொண்டே இருந்தன.
அவன் அஜய். சாகித்தியனின் நண்பன். எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தாலும் அவனிடத்தில் சற்று அதிகமாக இருந்தது. கலங்கும் விழிகளை மறைப்பதில் முனைந்தபடி சடலத்தைப் பின் தொடர்ந்தான்.
நாயகத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, மற்றவர்களின் கவனத்தைக் கவராமல், அவர்களுக்கு இடைஞ்சலும் கொடுக்காமல், அவனைப் பின் தொடர ஆரம்பித்தான் கதிரவன்.
அஜய், வீதியில் நிறுத்தியிருந்த தன் பைக்கில் ஏறவும், “ஷிட்!” என்று வாய்க்குள் முனகிவிட்டு எதிர் திசையில் நின்ற தன் பைக்கை எடுக்க ஓடினான். எதிரில் இன்னுமொரு பைக் வர, வேகமாக விலகி வழி விடப்போனவன் தட்டி, அவ்விடத்தில் நின்ற ஸ்கூட்டி தரையில் விழுந்தது.
அவனுக்குப் பின்னால் ஓடி வந்த நாயகம், “ஐயோ சேர், சிலுக்கு!” என்று பதறினார்.
“சிலுக்கா? வயசையும் பாக்காம ஏதாவது சொல்லப் போறன் நாயகம் அண்ணா. கெதியா வாங்க!” எவ்வளவு அவசரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரம் போய் என்ன பேச்சு இது என்கிற சினத்தில் சிடுசிடுத்துவிட்டு வேகமாக ஓடிப் போனான். அதே வேகத்துடன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து அவர் அருகில் நிறுத்த அவரும் ஏறிக்கொண்டார்.
அவன் வேகம் எடுக்க முனைந்த நொடியில் குறுக்காக வந்து நின்றாள் ஆதினி. “என்ன இது?” என்றாள் தன் ஸ்கூட்டியை காட்டி.
“ப்ச்! மறிக்காம முதல் தள்ளுங்க!” சிடுசிடுத்தபடி அவளைச் சுற்றிக்கொண்டு போக முனைந்தவனை அவள் விடவில்லை. மீண்டும் மறித்து நின்றாள்.
“நாயகம் அங்கிள் சொல்லியும் அவ்வளவு திமிராப் போறீங்க. மரியாதையா இறங்கி சிலுக்க நிமித்தி வச்சிட்டுப் போங்க!” என்றாள் உத்தரவாக.
அவர்களின் அவசரம் தெரியாமல் நடக்கும் அவள் மீது கதிரவனுக்கு எரிச்சல் பொங்கிற்று. அவன் எதையாவது சொல்வதற்குள் வேகமாக இறங்கி, அவளின் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்திவிட்டார் நாயகம்.
அதன் பிறகுதான் அவனை விட்டாள். அப்போதும், “முதல் முறை எண்டபடியா இத இதோட விடுறன். இனி என்ர சிலுக்குக்கு ஒரு அவமானம் நடந்தா, அது எனக்கு நடந்த மாதிரி. இத நினைவில வச்சு நடந்துகொள்ளுங்க!” என்று சொன்ன அவள், காற்றுடன்தான் கதைக்கவேண்டியிருந்தது.
அஜையைத் துரத்திக்கொண்டு பறந்திருந்தான் கதிரவன்.
பிரேதம் நாற்சந்தியைக் கடந்த பிறகு மயானத்துக்கு பைக்கில் செல்வதற்காகத் திரும்பி வந்துகொண்டிருந்த காண்டீபனின் பார்வையிலும் நடந்த அனைத்தும் பட்டது. அவளின் ‘சிலுக்கில்’ சின்ன சிரிப்பொன்று உதட்டோரம் அரும்பிற்று.
கூடவே நடந்து வந்துகொண்டிருந்த மாணவனிடம், “ஆர் அது?” என்று வினவினான்.
“ஆதினி சேர். எங்கட கம்பஸ்ல எங்கட பகல்ட்டி(faculty)தான். ஆனா, லோ(Law).” என்றான் அவன்.
“ஓ!” என்றவனின் விழிகள், இன்னுமே தன் சிலுக்குடன் என்னவோ கதை பேசிக்கொண்டு இருந்தவள் மீது சுவாரசியத்துடன் படிந்தது. அவள் வாய்க்குச் சட்டம் மகா பொருத்தம் என்றுதான் தோன்றிற்று.
“நீதிபதி இளந்திரையன் சேரின்ர மகள்.” அந்த மாணவன் வழங்கிய மேலதிகத் தகவலில் அவன் நடை நின்று போயிற்று.
“உண்மையாவா?”
“இல்லாம போலீசையே இந்தப்பாடு படுத்தேலுமா சேர்?”
பார்வை அவள் புறமிருக்கச் சிறு தலையசைப்புடன் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, அவளை நோக்கி நடந்தான்.
“ஏதும் ஹெல்ப் வேணுமா?”
ஸ்கூட்டியில் பட்டிருந்த தூசைத் தட்டிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தாள். இவனைக் கண்டதும், “காண்டீபன் சேர்!” என்று முகம் மலர்ந்துவிட்டு, “கீழ விழுந்திட்டுது. மற்றும் படி ஒரு பிரச்சினையும் இல்ல.” என்றபடி அதில் ஏறி அமர்ந்தாள்.
“என்னைத் தெரியுமா?” மெல்லிய ஆச்சரியத்துடன் வினவினான் காண்டீபன்.
“தெரியாம? ஆர்ட்ஸ் பகல்டி முழுக்க எங்கட காண்டீபன் சேர் அப்பிடி, எங்கட காண்டீபன் சேர் இப்பிடி எண்டு காதுல ரெத்தம் வர வைப்பினம். அப்பிடியான ஆளைத் தெரிஞ்சு வைக்காம இருப்பனா?”
சரளமாக வந்த அவள் பேச்சில் ஈர்க்கப்பட்டு, “அது சும்மா பாசத்தில சொல்லி இருப்பினம்.” என்று அவளிடம் பேச்சை வளர்த்தான் அவன்.