• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 24

அவள் திரும்பி அவனைப் பார்ப்பதற்கு கூட மறுத்தாள்.

“வஞ்சி!” அவள் பெயருக்கு அவன் கொடுத்த அழுத்தத்தில் திரும்பி அவனைப் பார்த்தாள்

“எப்பிடி இருக்கிறாய்?”

“எனக்கென்ன? நல்லாருக்கிறன்.”

இப்படி இறுக்கமாய் இருக்கிறவளை எப்படிப் பேச வைக்க என்று நிலனுக்கும் தெரியவில்லை.

மிக மிக ஆசையாய் அவளோடு வாழ்ந்தான். அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குள் ஓங்கி நின்றதுதான் அதிகம்.

பாலகுமாரனோடு அவளைப் பேச வைக்க முயன்றதுகூட அவளுக்காகத்தான். இப்படி அவர்கள் மட்டும் தனியாகப் பேசிக்கொள்ளத் திரும்பவும் சந்தர்ப்பம் அமையுமா தெரியாது. கிடைக்கிறபோது தன் கோபத்தை எல்லாம் அவள் கொட்டிவிட்டால் இன்னும் கொஞ்சம் தன் இறுக்கங்களில் இருந்து வெளியில் வருவாள் என்று நினைத்தான்.

அப்படியிருக்க திருமணம் என்கிற ஒன்று நடந்து, இருவர் மனமும் ஒன்றுபட்டு, தாம்பத்ய வாழ்க்கையும் ஆரம்பித்த பிறகும் ‘இதனால்தான் கலியாணம் வேண்டாம் என்று சொன்னேன்’ என்று அவள் சொன்னதே அவனைக் கோபம்கொள்ள வைத்திருந்தது. இதில் அதன் பிறகு அவள் சொன்னது?

அப்படி அவள் சொன்ன பிறகு எப்படி அவள் பக்கத்தில் போவான்? அவளை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவனால் தள்ளியிருக்கவும் முடியாது. இங்கேயே இருந்தால் அவள் சொன்னதையும் மீறி அவளை பார்க்கப் போய்விடுவோமோ என்றுதான் கொழும்புக்கு ஓடினான்.

ஆனாலும் என்ன சாட்டைச் சொல்லிக்கொண்டு அவளைப் பார்க்கலாம் என்று அவன் யோசித்துக்கொண்டு இருக்கையில் சரியாக அழைத்திருந்தார் குணாளன். அவரின் அழைப்பைப் பற்றிக்கொண்டு இதோ ஓடி வந்துவிட்டான்.

அவளானால் என்னவோ அவன் தவறிழைத்ததுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்கிறாள்.

இதற்குள் தையல்நாயகி வந்திருந்தது. என்னவோ அவளை வாசலோடு விட்டுவிட்டுப் போக மனமில்லை அவனுக்கு. அவளோடு கூடவே அலுவலகம் வரை வந்தான். அதற்கு முதல் காண்டீனிலிருந்து காலை உணவைக் கொண்டுவரச் சொல்லி ஆனந்தியிடம் சொல்லி அனுப்பினான்.

அது வந்ததும் சாப்பிடச் சொன்னான். அவள் சாப்பிடவில்லை. அன்று அவளுக்கு ஒரு மீட்டிங் இருந்தது. அதற்கு தேவையானவற்றை ஒழுங்குசெய்ய ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தான். அவள் உணவைத் தொடுவதாக இல்லை என்றதும் அன்று போலவே இன்றும் கரண்டியால் அதைக் குழைத்து, ஒரு கரண்டி அல்லி அவள் உதட்டருகில் நீட்டினான்.

சட்டென்று அவள் வேலைகள் எல்லாம் அப்படியே நின்றன. இப்படித்தான் ஒவ்வொன்றையும் அவளுக்குப் பார்த்து பார்த்துச் செய்து, மறுபடியும் அவள் மனக்கதவுகளை திறந்துகொண்டு வந்தான். பிறகு என்ன செய்தான்? இப்போது கூட அவள் தந்தை அழைக்கவில்லையானால் வந்திருக்கப் போவதில்லை.

சட்டென்று எழுந்து அங்கிருந்து வெளியேறப்போனவள் நின்று, “அப்பா இனி கூப்பிட மாட்டார். அதால அவர் கூப்பிட்டுட்டாரே எண்டு நீங்களும் விருப்பம் இல்லாம வர வேண்டாம்.” என்றுவிட்டு நடந்தாள்.

நிலனுக்கும் மெல்லிய கோபம் மூள, “நானும் ஆசைப்பட்டு வராம இருக்கேல்ல வஞ்சி. அண்டைக்கு நீ கதைச்சது பிழை!” என்றான் இறுக்கமான குரலில்.

“உண்மைதான். அதைச் சொன்ன நிமிசமே எனக்கும் விளங்கிட்டுது. நீங்களும் மிஸ்டர் பாலகுமாரனை கூட்டிக்கொண்டு இஞ்ச வந்திருக்கக் கூடாது நிலன். மிஸ்டர் சக்திவேலரை கூட என்னால ஏதோ ஒரு வகைல விளங்கிக்கொள்ள முடியுது. தொழில் போட்டி, மகள் வாழ்க்கை எண்டு அவர் யோசிச்சு இருக்கலாம். ஆனா இந்த மனுசன்? நஞ்சு. நச்சுப் பாம்பு. இந்தாளால ஒரு உயிர் என்ர வீட்டில போயிருக்கு இன்னொரு உயிர் வாழுற காலம் வரைக்கும் நிம்மதியா வாழவும் இல்ல, சாக்கேக்க நிம்மதியா செத்திருக்கவும் மாட்டா. அப்பிடியான இந்த மனுசனோட நான் என்ன கதைக்கோணும்? இல்ல, இதுக்கெல்லாம் அந்த ஆள் என்ன விளக்கம் சொல்லப் போறார்? அப்பிடியே சொன்னாலும் போன உயிர்கள் திரும்பியா வரப்போகுது?” என்று சீறிக்கொண்டு வந்தவள் ஒரு கணம் நிதானித்தாள்.

“ஆனாலும் நான் அப்பிடிச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனா அதுக்கு இப்பிடித்தான் வராமையே இருந்து தண்டிப்பீங்களா நிலன்? இதுக்கு எதுக்கு அவ்வளவு பாசத்தைக் காட்டினீங்க? நான்தான் உங்கட வாழ்க்கையே எண்டுற மாதிரி உணர வச்சீங்க? இல்ல, எல்லா ஆம்பிளைகளையும் மாதிரி ஆசைப்பட்டவள் கிடைக்கிற வரைக்கும்தான் அது எல்லாமா? இனி இவள் எங்க போகப்போறாள், என்ன செய்தாலும் எனக்குப் பின்னால வருவாள் எண்டுற நினைப்பா?”

இப்படியெல்லாம் யோசித்துத் தன்னைத் தானே வருத்திக்கொள்வாள் என்று யோசிக்காதவன் அவள் பேச்சில் அதிர்ந்துபோனான்.

“வஞ்சி…”

“போதும் நிலன். இனி இந்த இடைவெளிலயே நில்லுங்க. சத்தியமா இந்த உணர்வுப் போராட்டத்தை எல்லாம் தாங்கிற சக்தி எனக்கு இல்ல. நாங்க விலகியே இருப்பம்.” எண்றுவிட்டுப் போய்விட, தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிலன்.

தொடரும்…

சொறி மக்களே, குட்டி எபிதான். நாளைக்கும் வரமாட்டேன். சிந்துக்கு அடுத்த செமஸ்ட்டர் தொடங்குது. நாளைக்கு ஆளைக் கூட்டிக்கொண்டு போய் விட்டுட்டு வரோணும். சோ அதோடேயே நாள் போயிடும். இண்டைக்கும் அவாக்குத் தேவையானதுகளை ரெடி பண்ணுறதுலையே நேரம் போயிட்டுது. என்னை பேசாம கொஞ்சம் சமாளிங்க.
Sindukkaga excuse accept pannikkirom
 

Yamu

Member
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்று சொல்வார்கள் அது உனக்கு 100% பொருந்தும் நிலன்.
 

Ananthi.C

Active member
இதுக்கு தான் இந்த பையபுள்ள எங்க வஞ்சிக்கு வேணாம்ன்னு நினைச்சது..... எப்படி கெத்தா இருந்த வஞ்சிய எப்படி ஏங்கிப்போக வச்சுட்டான்...

வஞ்சி சொன்னத கேட்டீல்ல போதுமான இடைவெளிய கடைபிடி அதவுட்டுட்டு கால்ல விழுகுறது கட்டி பிடிக்கிறது என்று எதுவும் டிரை பண்ணாதீங்க ஹீரோ சார்... அப்புறம் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது....

ஏன்னா இங்க வஞ்சிக்கு தான் ஆர்மி இருக்கு...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom