• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
மக்களே, ஒரு விடயம் சும்மா உங்களோடு பகிரலாம் என்றும் நினைக்கிறேன்.

இந்த இணைய உலகத்தில் பலர் கதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் இல்லையா. அப்படி இருக்கையில் ஒரே மாதிரியான கருக்களை எடுத்து அவரவர் கோணத்தில் எழுதுவது என்பது வேறு. ஆனால், அதே கதையையோ அல்லது அதே காட்சியை எடுத்து அப்படியே எழுதுவதற்கு பெயர் வேறு.

இதே மாதிரி ஒரு நிகழ்வு 2020ல் எனக்கு நடந்தது. 2017ல் நான் எழுதிய நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவல் அதே கருவோடு அப்படியே கதையாக வந்து புத்தகமாகவும் வெளிவந்திருந்தது.

இதில் கவலையான விடயம் என்னவென்றால் அந்தக் கதையைப் போல் என் கதை இருக்கிறதே என்று ஒரு கருத்தினை நான் பார்க்க நேர்ந்ததுதான்.

இதுதான் அது :

bf0327a3-9ec9-4eb4-b6af-359a248cdb55.jpeg




அதனால்தான் இப்போதும் என் வாசகர்களுக்கு இந்த விளக்கம்.

உன் அன்புக்கு நன்றி - என் வாழ் நாளில் என்னால் மறக்கவே முடியாத ஒரு கதை. அதைப்போலத்தான் அதை வாசித்த ஒவ்வொரு வாசக உறவுகளின் மனத்திலும் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் என்று எனக்குத் தெரியும்.

அந்தக் கதையிலிருந்து ஒரு காட்சியை இங்கே பகிர்கிறேன். ஏதாவது ஒரு காலத்தில் அல்லது என்றாவது ஒரு நாள் இதேபோல் காட்சிகளை வேறு கதைகளிலும் நீங்கள் பார்க்கலாம். இல்லை, ஏற்கனவே பார்த்திருக்கலாம். அப்போது வந்து என்ன இது அந்தக் கதையில் வருகிற காட்சி இங்கு வருகிறதே என்று சொல்லிவிடாதீர்கள்.

நான் அப்படியானவளும் அல்ல. என் எழுத்து அப்படியானதும் அல்ல. என் வாசகர்களுக்கு என்னைத் தெரியும் என்கிற நம்பிக்கையோடு அன்பும் நன்றியும் அனைவருக்கும்.

நட்புடன் நிதா. 7a3ee419-9bde-4493-bd3c-230ef84853fe.jpeg

a22cf265-b868-4a93-9367-208cb6c826dd.jpegadf1e25e-839b-483b-9dd0-026ef695cd94.jpeg
93b7cce7-ece9-476e-ab2b-4418bd6bdaef.jpeg
 
Last edited:

vidhyavjy

New member
நீங்க இப்படி எல்லாம் வருத்தப்படும் கூடாது... நீங்க தான் உண்மையானவர்... திறமைசாலி.... உங்கள் கதைகள் அவ்வளவும் படித்தவள் என்ற முறையில் நான் சொல்வது... கெத்தா நடங்க.... பாத்துக்கலாம் ❤❤❤
 
காலை வணக்கம் இங்கே நிதா அவர்களே
நான் நிறைய வாசிக்கும் இயல்புடையவள்....
நிறைய இல்லையென்றாலும் ஒரு சில தளங்களில் சில பல எழுத்தாளர்களின்
எண்ணங்களின் எழுத்துக்களை வாசித்து கொண்டிருக்கிறேன்....
உங்களின் எண்ணங்களும் எழுத்துகளும்
தனித்துவமானவை.....
யாமறிந்த கதைகளோடும் கதாபாத்திரங்கள் ஓடும் ஒப்பிட முடியாதவை.....
ஒவ்வொரு எழுத்தாளரும் தனித்துவமான
நடை உண்டு.....
உங்களுடையது உங்களில் மட்டுமே.......
நீண்ட உரையாடி விட்டது
பொருத்தருள்க......
நன்றி....
 
உங்கள் எழுத்து நடை உங்கள் கதைகள் உங்களுக்கு உரிய தனி திறமை நிதா. அது கடவுள் கொடுத்த கொடைtஉங்களுக்கு. நீங்கள் எதையும் நினைத்து கவலை பட வேண்டாம். காய்க்கிற மரம் தானே கல்லடி படும். Dont worry நிதா ❣
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom