அத்தியாயம் 21
வேலை முடிந்து வந்த மகளைக் கண்டு முகம் மலர்ந்தாலும் கணவன் வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்திருக்கிறாளே என்று உள்ளூரகக் கவலையானார் குணாளன்.
அதைக் கேட்கவும் தயங்கினார். நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறேன் என்று சொல்லிவிடுவாளோ என்று பயம். அவர்களைக் குறித்த அவள் நிலைப்பாடு என்ன என்றும் தெரியவில்லை.
இந்தக் கவலைகள் மனத்தில் அரித்தபோதும் அவளிடத்தில் தெரிந்த சோர்வைக் கவனித்து, “வேலை நிறையவாம்மா? நல்லா களைச்சு தெரியிறீங்க.” என்றார்.
“விட்டதை எல்லாம் பிடிக்கோணும் எல்லாப்பா.” என்றுவிட்டு அவர் நலத்தை, வீட்டு நிலவரத்தை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். ஜெயந்தி போட்டுக்கொண்டு வந்து கொடுத்த தேநீரையும் பருகிவிட்டு அவள் எழுந்துகொள்ள, “அம்மாச்சி…” என்றார் மனத்தில் இருப்பதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல்.
“கவலைப்படாதீங்க அப்பா. அங்க போவன். கட்டாயம் போவன். போகோணும்!” என்றாள் அவர் மகள்.
அதற்கே அவருக்கு அடிவயிறு கலங்கிப்போயிற்று.
“சண்டை சச்சரவுகள் வேண்டாம் பிள்ளை.” என்றார் கெஞ்சலாக.
“நான் ஏனப்பா சண்டைக்குப் போக? அத விடுங்க. எங்க சுதாகர்? சுவாதி என்ன செய்றாள்?” என்று கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றவளின் கையைப் பற்றித் தடுத்தார் குணாளன்.
“உங்கட அப்பம்மா ஏன் இதையெல்லாம் உங்களிட்டச் சொல்ல விரும்பேல்ல எண்டு உங்களுக்கு விளங்கினது தானேம்மா? எல்லாத்துக்கும் நியாயம் கிடைக்காது. சிலதுக்கு எந்த நியாயம் கிடைச்சாலும் நாங்க இழந்ததுக்கு அது ஈடாகாது. உங்கட அப்பம்மாவையே யோசிங்கோ. இதுக்கு நியாயம் கிடைச்சே ஆகோணும் எண்டு போயிருந்தா இண்டைக்கு தையல்நாயகி இருந்திருக்குமா தெரியாது. எல்லாத்தையும் விட எனக்கு என்ர ரெண்டு பிள்ளைகளும் சந்தோசமா வாழோணும்.” எப்படியாவது அவள் கோபத்தைத் தணித்துவிட மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் எடுத்துச் சொன்னார் மனிதர்.
“அப்பா, இப்ப நான் என்ன செய்தனான்? ஒண்டுமே செய்யேல்ல. பிறகும் என்னத்துக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க? நீங்க கவலைப்பட்டது, மனதுக்க வச்சு மருகினது எல்லாம் போதும். இனியாவது நிம்மதியா இருங்க.” என்றாள் கனிந்த குரலில்.
முன்னர் எல்லாம் அவள் சம்மந்தப்பட்ட விடயத்தில் ஒரு வார்த்தை சொல்ல முதல் அவளுக்குக் கோபம் வந்துவிடும். இப்போதெல்லாம் கனிவைத் தாண்டி வேறு மொழி அவரிடம் அவளுக்கு வரவே மாட்டேன் என்றது. அந்தளவில் அவர்களின் அன்பு அவளை மலைக்க வைத்தது.
அவர்களின் திருமணத் திகதி அவளுக்குத் தெரியும். அது அவள் பிறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முந்தயது. அந்தளவில் அவர்களின் திருமணத் திகதியை வைத்து அவளோ இல்லை வேறு யாருமோ சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்று, அதைக்கூடக் கவனித்து மாற்றி, பொய்யான சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இன்று அலுவலகத்திலிருந்து யோசிக்கையில்தான் இது பிடிபட்டிருந்தது. பிடிபட்ட கணம் மிகவுமே நெகிழ்ந்துபோனாள்.
அதே நெகிழ்வுடன் மேலே வந்து குளித்து, இலகு உடைக்கு மாறினாள். பார்க்க வேண்டியிருந்த சில வேலைகளை முடித்துக்கொண்டு நேரத்தைப் பார்க்க அது இரவு ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.
நிலன் நினைவில் வந்தான். உடனேயே கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். வீட்டுக்கு வரும்போதே அவனுக்கான தடையை நீக்கியிருந்தாள். அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. புலனத்தின் புரோஃபைலில் அழகான சாம்பல் நிற கோர்ட் ஷூட்டில், உதடு பிரியாத சிறு சிரிப்புடன் முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.
பெரிதாகப் கோபப்பட்டு ஏறி விழுகிற குணம் இல்லையே தவிர அழுத்தமானவன். அவன் புகைப்படத்தை இன்னும் கொஞ்சம் பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் விரித்துப் பார்த்தாள்.
வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போயிருப்பானா? அப்படிப் போயிருந்தால் அவள் இல்லை என்று தெரிய வந்திருக்குமே. சரி, அவளுக்கு மன அமைதி கிட்டும் இடத்தில் இருக்கட்டும் என்று விட்டுவிட்டானோ?
கைப்பேசியை வைத்துவிட்டுக் கீழே உணவுண்ணப் போனாள். அங்கே சுவாதியோடு அமர்ந்திருந்தான் மிதுன். இவளைக் கண்டதும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது தடுமாறினான்.
அவள் தன் தமக்கை என்று தெரிந்ததிலிருந்து பார்க்கக் கிடைக்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறான். புதிதாகத் தெரிந்தாள். என் அக்கா என்கிற அந்த நினைப்பே அவனுக்குள் என்னென்னவோ உணர்வுகளை எல்லாம் தோற்றுவித்தன.
இதற்குள் அவளைக் கண்டுவிட்டு, “அக்கா!” என்று ஓடி வந்தான் சுதாகர். இளவஞ்சியின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அன்று நடந்தவற்றை எல்லாம் அவளிடம் பகிர்ந்தபடி உணவை முடித்தான். நடுவில் சுவாதியின் உடல் நலத்தை அவளிடமே கேட்டுத் தெரிந்துகொண்டாள் இளவஞ்சி.
சுதாகர் எழுந்துகொள்ளப் போக, “ஒழுங்கா படிக்கிறாய்தானே. கொஞ்ச நாளா அக்கா இஞ்ச இல்ல, உன்னைக் கவனிக்கவும் இல்லை எண்டதும் படிப்பை விட்டுடேல்லையே?” என்று வினவினாள்.
அதற்கு வாயால் பதில் சொல்லாமல் ஓடிப்போய் இந்த இடைப்பட்ட நாள்களில் அவன் எழுதிய பரீட்சைப் பேப்பர்களை கொண்டு வந்து காட்டி, தான் அப்படிப் படிப்பை விடவில்லை என்று நிரூபித்தான் சுதாகர்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மிதுன் எப்படி உணர்கிறான் என்று அவனால் வரையறுக்க முடியவில்லை. இன்றுதான் அவள் தன் தமக்கை என்று தெரிய வந்திருந்தது. அது தெரிய வந்ததில் இருந்தே அந்தத் தமக்கையைக் குறித்த தேடல் அவனுக்குள் இருந்துகொண்டே இருந்தது.
அந்தத் தமக்கைக்கும் அவன் அவள் தம்பி என்று தெரிந்திருக்குமே. ஆனாலும் திரும்பியும் பார்க்கவில்லை அவள். அவன் வீட்டினர் மீதான கோபத்தை அவனிடமும் காட்டுகிறாளோ?
வேலை முடிந்து வந்த மகளைக் கண்டு முகம் மலர்ந்தாலும் கணவன் வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்திருக்கிறாளே என்று உள்ளூரகக் கவலையானார் குணாளன்.
அதைக் கேட்கவும் தயங்கினார். நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறேன் என்று சொல்லிவிடுவாளோ என்று பயம். அவர்களைக் குறித்த அவள் நிலைப்பாடு என்ன என்றும் தெரியவில்லை.
இந்தக் கவலைகள் மனத்தில் அரித்தபோதும் அவளிடத்தில் தெரிந்த சோர்வைக் கவனித்து, “வேலை நிறையவாம்மா? நல்லா களைச்சு தெரியிறீங்க.” என்றார்.
“விட்டதை எல்லாம் பிடிக்கோணும் எல்லாப்பா.” என்றுவிட்டு அவர் நலத்தை, வீட்டு நிலவரத்தை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். ஜெயந்தி போட்டுக்கொண்டு வந்து கொடுத்த தேநீரையும் பருகிவிட்டு அவள் எழுந்துகொள்ள, “அம்மாச்சி…” என்றார் மனத்தில் இருப்பதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல்.
“கவலைப்படாதீங்க அப்பா. அங்க போவன். கட்டாயம் போவன். போகோணும்!” என்றாள் அவர் மகள்.
அதற்கே அவருக்கு அடிவயிறு கலங்கிப்போயிற்று.
“சண்டை சச்சரவுகள் வேண்டாம் பிள்ளை.” என்றார் கெஞ்சலாக.
“நான் ஏனப்பா சண்டைக்குப் போக? அத விடுங்க. எங்க சுதாகர்? சுவாதி என்ன செய்றாள்?” என்று கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றவளின் கையைப் பற்றித் தடுத்தார் குணாளன்.
“உங்கட அப்பம்மா ஏன் இதையெல்லாம் உங்களிட்டச் சொல்ல விரும்பேல்ல எண்டு உங்களுக்கு விளங்கினது தானேம்மா? எல்லாத்துக்கும் நியாயம் கிடைக்காது. சிலதுக்கு எந்த நியாயம் கிடைச்சாலும் நாங்க இழந்ததுக்கு அது ஈடாகாது. உங்கட அப்பம்மாவையே யோசிங்கோ. இதுக்கு நியாயம் கிடைச்சே ஆகோணும் எண்டு போயிருந்தா இண்டைக்கு தையல்நாயகி இருந்திருக்குமா தெரியாது. எல்லாத்தையும் விட எனக்கு என்ர ரெண்டு பிள்ளைகளும் சந்தோசமா வாழோணும்.” எப்படியாவது அவள் கோபத்தைத் தணித்துவிட மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் எடுத்துச் சொன்னார் மனிதர்.
“அப்பா, இப்ப நான் என்ன செய்தனான்? ஒண்டுமே செய்யேல்ல. பிறகும் என்னத்துக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க? நீங்க கவலைப்பட்டது, மனதுக்க வச்சு மருகினது எல்லாம் போதும். இனியாவது நிம்மதியா இருங்க.” என்றாள் கனிந்த குரலில்.
முன்னர் எல்லாம் அவள் சம்மந்தப்பட்ட விடயத்தில் ஒரு வார்த்தை சொல்ல முதல் அவளுக்குக் கோபம் வந்துவிடும். இப்போதெல்லாம் கனிவைத் தாண்டி வேறு மொழி அவரிடம் அவளுக்கு வரவே மாட்டேன் என்றது. அந்தளவில் அவர்களின் அன்பு அவளை மலைக்க வைத்தது.
அவர்களின் திருமணத் திகதி அவளுக்குத் தெரியும். அது அவள் பிறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முந்தயது. அந்தளவில் அவர்களின் திருமணத் திகதியை வைத்து அவளோ இல்லை வேறு யாருமோ சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்று, அதைக்கூடக் கவனித்து மாற்றி, பொய்யான சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இன்று அலுவலகத்திலிருந்து யோசிக்கையில்தான் இது பிடிபட்டிருந்தது. பிடிபட்ட கணம் மிகவுமே நெகிழ்ந்துபோனாள்.
அதே நெகிழ்வுடன் மேலே வந்து குளித்து, இலகு உடைக்கு மாறினாள். பார்க்க வேண்டியிருந்த சில வேலைகளை முடித்துக்கொண்டு நேரத்தைப் பார்க்க அது இரவு ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.
நிலன் நினைவில் வந்தான். உடனேயே கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். வீட்டுக்கு வரும்போதே அவனுக்கான தடையை நீக்கியிருந்தாள். அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. புலனத்தின் புரோஃபைலில் அழகான சாம்பல் நிற கோர்ட் ஷூட்டில், உதடு பிரியாத சிறு சிரிப்புடன் முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.
பெரிதாகப் கோபப்பட்டு ஏறி விழுகிற குணம் இல்லையே தவிர அழுத்தமானவன். அவன் புகைப்படத்தை இன்னும் கொஞ்சம் பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் விரித்துப் பார்த்தாள்.
வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போயிருப்பானா? அப்படிப் போயிருந்தால் அவள் இல்லை என்று தெரிய வந்திருக்குமே. சரி, அவளுக்கு மன அமைதி கிட்டும் இடத்தில் இருக்கட்டும் என்று விட்டுவிட்டானோ?
கைப்பேசியை வைத்துவிட்டுக் கீழே உணவுண்ணப் போனாள். அங்கே சுவாதியோடு அமர்ந்திருந்தான் மிதுன். இவளைக் கண்டதும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது தடுமாறினான்.
அவள் தன் தமக்கை என்று தெரிந்ததிலிருந்து பார்க்கக் கிடைக்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறான். புதிதாகத் தெரிந்தாள். என் அக்கா என்கிற அந்த நினைப்பே அவனுக்குள் என்னென்னவோ உணர்வுகளை எல்லாம் தோற்றுவித்தன.
இதற்குள் அவளைக் கண்டுவிட்டு, “அக்கா!” என்று ஓடி வந்தான் சுதாகர். இளவஞ்சியின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அன்று நடந்தவற்றை எல்லாம் அவளிடம் பகிர்ந்தபடி உணவை முடித்தான். நடுவில் சுவாதியின் உடல் நலத்தை அவளிடமே கேட்டுத் தெரிந்துகொண்டாள் இளவஞ்சி.
சுதாகர் எழுந்துகொள்ளப் போக, “ஒழுங்கா படிக்கிறாய்தானே. கொஞ்ச நாளா அக்கா இஞ்ச இல்ல, உன்னைக் கவனிக்கவும் இல்லை எண்டதும் படிப்பை விட்டுடேல்லையே?” என்று வினவினாள்.
அதற்கு வாயால் பதில் சொல்லாமல் ஓடிப்போய் இந்த இடைப்பட்ட நாள்களில் அவன் எழுதிய பரீட்சைப் பேப்பர்களை கொண்டு வந்து காட்டி, தான் அப்படிப் படிப்பை விடவில்லை என்று நிரூபித்தான் சுதாகர்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மிதுன் எப்படி உணர்கிறான் என்று அவனால் வரையறுக்க முடியவில்லை. இன்றுதான் அவள் தன் தமக்கை என்று தெரிய வந்திருந்தது. அது தெரிய வந்ததில் இருந்தே அந்தத் தமக்கையைக் குறித்த தேடல் அவனுக்குள் இருந்துகொண்டே இருந்தது.
அந்தத் தமக்கைக்கும் அவன் அவள் தம்பி என்று தெரிந்திருக்குமே. ஆனாலும் திரும்பியும் பார்க்கவில்லை அவள். அவன் வீட்டினர் மீதான கோபத்தை அவனிடமும் காட்டுகிறாளோ?
Last edited: